quality="high"
type="application/x-shockwave-flash"
WMODE="transparent"
width="826"
height="125"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
allowScriptAccess="always" />

Tuesday, July 15, 2008

A.R.ரஹ்மானை நடிக்க வைப்பேன் : பாரதிராஜா உறுதி

கோடைகால வெயிலில் கொட்டும் மழைபோலதான் 'சக்கரகட்டி' விழாவில் பாரதிராஜா பேசியதை ஏ.ஆர்.ரஹ்மான் எதிர்பார்த்திருக்கமாட்டார். உன்னை நடிகனாக்கியே தீருவேன் என பாரதிராஜா பண்ணிய சத்தியத்தில் திக்கு முக்காடிப்போனார் ரஹ்மான்.

கலைப்புலி தானு தயாரிக்க அவரது மகன் கலாபிரபு இயக்கியுள்ள படம் 'சக்கரகட்டி'. இதில் பாக்யராஜி்ன் மகன் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இஷிதா ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வாலி, நா.முத்துக்குமார், பா.விஜய், ப்ளஸி பாடல்களை எழுதியுள்ளனர்.

பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று இரவு நடந்தது. பாடல்களை பாலசந்தரும் பாரதிராஜாவும் வெளியிட, ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாரும், சாந்தனுவின் அம்மா பூர்ணிமாவும் பெற்றுக் கொண்டனர்.

கலைப்புலி தாணுவின் வாரிசும், திரைக்கதை புலி பாக்யராஜின் வாரிசும் அறிமுகமாகும் இந்தப் படம் நிச்சயம் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என எஸ்.பி.முத்துராமன் முன்மொழிந்த வாழ்த்துக்களை அவரை அடுத்து பேசிய விஐபிகள் வழிமொழிந்த வண்ணம் பேசினர்.

"வட நாட்டு ஹீரோபோல் அழகாக இருக்கும் சாந்தனுவிடம் அவனது தந்தை பாக்யராஜைபோல திறமைகள் இருக்கும் என்பதால் சந்தேகமில்லை. கலாபிரபுவும் படத்தை சிறப்பாக எடுத்திருப்பார் என்பதற்கு சாம்பிளாக இங்கே பார்த்த இரண்டு பாடல் காட்சிகள் இருந்தன. 

படத்தின் இன்னொரு நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். அவரிடம் பாடல் வாங்குவது என்பது புலி பால் கறப்பதுபோல சிரமம். என் படத்திற்கு ரஹ்மானிடம் பாடல் வாங்க கஷ்டப்பட்டது எனக்குத்தான் தெரியும். உலகம் முழுவதும் இன்று  தமிழர்களுக்கு பெருமை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.

இதோ மேடையில் இருக்கும் ரஹ்மானின் படத்தை பாருங்கள். அவர் கொடுத்திருக்கும் போஸில், கண்களில் ஒரு தீட்சண்யம் இருக்கிறது" என்று ரஹ்மானை பார்த்து பேச ஆரம்பித்தவர், உன்னிடம் பாடல்களை வாங்கமுடியவில்லை. இனி நான் கேட்கபோவதுமில்லை. ஆனால், நான் இயக்கும் படத்தில் உன்னை நடிக்க வைக்கப்போகிறேன். நிச்சயம் நீ நடிக்க வேண்டும். இத்தனை பேர் கூடியுள்ள இந்த சபை மீது இது சத்தியம் என உணர்ச்சிவசப்பட, வெட்கம் தாங்காமல் புன்னகையை பதிலாக தந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

நாயகன் சாந்தனு பேசியபோது, "அப்பாவிற்கு நல்ல பெயரை எடுத்து தருகிறோனோ இல்லையோ, அவரது பெயரை கெடுக்காமல் பார்த்துக் கொள்வேன்" என கூற அருகில் நின்றபடி மகனின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தார் பாக்யராஜ்.

முன்னதாக திரையிடப்பட்ட இரண்டு பாடல்களிலும் சௌந்தர்யா ரஜினி அமைத்திருந்த கிராபிக்ஸ் காட்சிகள், இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத வகையில் அழகாக இருந்தது.

No comments: