இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, பரத், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், ஸ்ரேயா, அசின், நயன்தாரா, திரிஷா, பிரியாமணி, பாவனா, சந்தியா, நமீதா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் எல்லோருக்கும் கடிதங்கள் அனுப்பப்படுகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி முதலாந்திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாந்திகதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். |
--
People Of Thambiluvil www.thirukkovil.com
No comments:
Post a Comment